Friday, December 23, 2011

சங்கீத சிம்மமாக....குன்னக்குடி வைத்தியநாதன்





எமதர்மராஜன் என்ன காரணத்தினாலோ தமிழ்நாடு பிரமுகர்கள் மீது பாசக்கயிறு வீசுவதில் பிஸியாக இருக்கிறார்.

வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் திங்களன்று மறைந்தார்.

குன்னக்குடி என்பது குன்றக்குடி தான்.

11 வயதிலேயே சங்கீத சிம்மமாக இருந்த ஆரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு வயலின் வாசித்த, பிறவி இசை மேதை வைத்தியநாதன்.

"நான் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்" என்று தன்னை வர்ணித்துக் கொள்வார். "என்னிடம் உனக்கு எது தேவையோ அதைப் பெற்றுக் கொள்" என்பார். இசை ஞானம் மிகுந்த அவர், பாமரர்களிடமும் இசையைக் கொண்டு செல்ல விரும்பினார்.

தன் கச்சேரியை மூன்று பாகமாக பிரிப்பார். முதல் ஒன்றரை மணி நேரம் சுத்தமான கர்நாடக சங்கீதம். பிறகு பக்தி பாடல்கள். பின்னர் சினிமா பாட்டு. கேட்க வந்த எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்.

ஆனால், படிப்பு ஏறவில்லை. இவர் எதற்கும் லாயக்கற்றவர் என்று தந்தையால் குறை கூறப்பட்டவர். தந்தை ராமசாமி சாஸ்திரி சமஸ்கிருத மேதை. அப்பாவின் கேலியை பொறுக்கமாட்டாமல், 'நான் வயலின் மேதை ஆவேன்' என்று சபதம் எடுத்தார். ஒரு வயலின் வாங்கினார். பிறகு அவர் வெற்றிப் படிகளில் ஏறினார் !

தனக்கு மியூசிக் அகாடமி 'சங்கீத கலா நிதி' பட்டம் தந்து கவுரவப் படுத்தவில்லையே என்று கடைசி வரை வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

மத்திய அரசு 'பத்ம ஸ்ரீ' பட்டமாவது கொடுத்தது.

பாமரமக்களை இசை கேட்க வைத்து 'குஷி' படுத்திய ஒரு மேதை இனி இல்லை.

No comments:

Post a Comment